புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தமிழக – புதுச்சேரி எல்லையில் தமிழகத்திற்கு உட்பட்ட வானூர் தாலுகாவில் உள்ள கிராமம் கீழ்கூத்தப்பாக்கம். இந்த கிராமத்தை சார்ந்தவர் பஞ்சாபகேசவன். இவருடைய மனைவியின் பெயர் சுகன்யா. பஞ்சாபகேசவன் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 வயதுடைய ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த சுகன்யாவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரை புதுச்சேரி ராஜீவகாந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சுகன்யாவை சோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பதை உறுதி செய்ததை அடுத்து., அவரை தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் சுகன்யா நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதமாக உயிரிழந்தார். மேலும் அவரின் 9 மாத சிசுவும் உயிரிழந்தது. இதன் காரணமாக அவன் கணவர் மற்றும் உறவினர்கள் கதறியழுதது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் இந்த சோக சம்பவமானது அவர்களின் கிராமத்தினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. தற்போது வரை புதுச்சேரி பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் சுமார் 39 நபர்கள் அனுமதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.






