வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்மணாங்குப்பத்தை சேர்தவர் திருவேங்கடம் பரிமளா தம்பதிகள். இவர்களுக்கு இரண்டு மகன்கள். இதில் உடல்நிலை குறைவு காரணமாக மூத்த மகன் உயிரிழந்தார். மூத்த மகனின் பிரிவைத் தாங்க முடியாமல் தம்பதிகள் இருவரும் மிகுந்த மக வேதனையில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று மூத்த மகனின் பிறந்த தினத்தை கொண்டாடிய தம்பதிகள், குடும்பத்தினருடன் முதியோர் இல்லத்திற்கு சென்று, அங்கு அனைவருக்கும் உணவு வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த அவர்கள், மகனின் பிரிவை நினைத்து மன வேதனையில் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இனியும் நாம் வாழ்வதில் அர்த்தமில்லை என்று எண்ணிய அவர்கள் விபரீத முடிவை எடுத்துள்ளனர். திருவேங்கடம், அவரது மனைவி பரிமளா, இளைய மகன் மாதேஷ் ஆகிய மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இறந்தவர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மூவரும் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூத்த மகனின் உயிரிழப்பால் மனமுடைந்து தம்பதிகள் இரண்டாவது மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






