துண்டு துண்டாக வெட்டப்பட்ட கல்லூரி மாணவர்!

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரின் மகன் பிரவீன்குமார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இந்நிலையில் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் செல்லும் பிரவீன்குமார் எப்போதுமே அதிவேகமாக செல்வது வழக்கம். இதனால் அப்பகுதியில் உள்ள சைலோ கண்ணன் என்பவருக்கும் பிரவீன்குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இப்படியே அடிக்கடி இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த சைலோ கண்ணன் பிரவீன்குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து நேற்று இரவு பிரவீன்குமார் அவரது நண்பர் காளியுடன் தன் வீட்டின் முன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் பிரவீன்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்இ அதை தடுக்க சென்ற அவரது  நண்பர் காளியையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகயாம் அடைந்த அவரது நண்பர் காளி சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த தெப்பக்குளம்  போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் பிரவீன் குமாரை கொலை செய்ததாக கூறப்படும் கண்ணன் அவரை கொலை செய்வதற்கு  சில மணி நேரத்திற்கு முன்பு அனுப்பானடி அம்பேத்கார் நகரை சேர்ந்த அரசமகாராஜன் என்பவரை அரிவாளால் வெட்டியுள்ளார். அதில் அவர் தலையில் சிறிய காயத்துடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதைத் தொடர்ந்து அனுப்பானடி வந்த கண்ணன் பிரவீன்குமாரை கொலை செய்துள்ளார்.