மாணவியை நிர்வாணப் படுத்தி தாக்குதல் நடத்திய ஆசிரியை….!

மாணவியை நிர்வாணப் படுத்தி தாக்குதல் நடத்திய ஆசிரியை….!

வேலுார் மாவட்டம், ஜோலார் பேட்டையில் வசித்து வருகிறார், 14 வயது மாணவி. இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை 3 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து விட்டார்.

அவர் இறப்பதற்கு முன்பாக, பார்சம்பட்டி எம்.எம். பேட்டை தெருவைச் சேர்ந்த ஜுட்வின் என்பவருக்கு, 5 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளார். ஆனால், அந்தப் பணத்தை வாங்கிய பிறகு, ஜுட்வின், வாங்கிய கடனையும், அதற்கான வட்டிப் பணம் எதையும் தரவில்லை.

இதனால், அந்த மாணவியின் தாய் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில், ஜுட்வின் மீது புகார் அளித்தார். பின், அங்கு, ஜுட்வினிடம், மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை, அந்த மாணவியின் வீட்டிற்கு, கொடுக்கும் படி, போலீசார் சொன்னார்கள். அதன்படி, மாதா மாதம் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார் ஜுட்வின்.

இந்தப் பணத்தை ஒவ்வொரு மாதமும், அந்த மாணவியின் தாயார் தான் சென்று ஜுட்வின் வீட்டிற்கு வந்து வாங்கி வந்தார். அவருக்கு வேலையாக இருந்ததால், தன் மகளிடம் சொல்லி ஜுட்வின் வீட்டிற்குச் சென்று பணம் வாங்கி வரச் சொன்னார்.

அதன்படி, அந்த மாணவி, ஜுட்வின் வீட்டிற்குச் சென்று பணம் கேட்டதற்கு, ஜுட்வின் மனைவி ராஜேஸ்வரி, அந்த மாணவியை வீட்டிற்குள் அடைத்து, அவரை நிர்வாணப் படுத்தி, கடும் தாக்குதல் நடத்தி உள்ளார்.

இதனால், அவமானமும், தாங்க முடியாத வலியும் அடைந்த மாணவி, அங்கிருந்து தப்பி வந்து, தன் தாயிடம் நடந்ததைக் கூறினார்.

அவர் ஜோலார் பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், ராஜேஸ்வரி கைது செய்யப் பட்டார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார், என்பது குறிப்பிடத் தக்கது.