உலகில் உள்ள பல்வேறு நகரங்கள் பல சாதனைகளையும்., பல்வேறு விதமான வளர்ச்சியையும் கண்டு வரும் நிலையில் தான் இந்த நகரம் அழிந்துள்ளது. இந்த நகரமானது ஐரோப்பாவில் அமைந்துள்ளது.
இந்த நகரமானது சோவியத் காலத்தில் கைவிடப்பட்ட நகரமாக விளங்குகிறது. இந்த நகரத்தின் பெயர் அகர்மரா. இந்த நகரமானது சுரங்கத் தொழிலில் தலைசிறந்து விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நகரின் தொடக்ககாலமான 1970-ம் வருடங்களில் சுமார் 5000 நபர்கள் அவர்களின் குடும்பங்களுடன் வசித்து வந்த நிலையில்., தற்போது வெறும் 35 நபர்கள் மற்றும் அவர்கள் வளர்க்கும் கால்நடைகளும் மட்டுமே இருக்கின்றது.
சோவியத் காலகட்டத்தில் கைவிடப்பட்ட நகரமான இது கிழக்கு ஐரோப்பாவில் அப்காசியாவில் இந்த நகரம் உள்ளது. இங்கு நடந்த போர்கள் மற்றும் பொருளாதார மாற்றங்களும் இந்த நகரில் வாழ்ந்த மக்களிடம் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி., இந்த நகரை கைவிட வைத்தது.
இந்த நகரத்தினை தற்போது காணுகையில் ஒரு காலத்தில் செழுமையாக காணப்பட்ட இந்த நகரமானது., தற்போது மரங்களின் ஆளுமை நிறைந்து, அங்குள்ள கட்டிடங்கள் முழுவதும் மரங்களால் சூழப்பட்டு உள்ளது. வெறும் 35 நபர்களே இந்த நகரில் தற்போது வாழ்ந்து வரும் நிலையில் பகலிலேயே அமானுஷ்யம் நிறைந்த பகுதி போலவே காட்சியளிக்கிறது.