டிரம்பை சபிக்கும் சீனா பன்றிகள், கோழிகள்!

அமெரிக்காவில் இருந்து சோயாபீன்ஸ் இறக்குமதியை குறைத்துக்கொள்ள சீனா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகபோர் தீவிரமடைந்து வருகிறது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும் பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் உலகளவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து சீனா சோயாபீன்ஸை இறக்குமதி செய்கிறது. சீனாவில் இருக்கும் 400 மில்லியன் பன்றிகளுக்கு இந்த சோயாபீன்ஸ்தான்புரத சத்தை கொடுக்கும் உணவுப்பொருள் . மேலும் சினாவில் வளர்க்கப்படும் பிராயிலர் கோழிகளுக்கு இதுதான் தீனியாக கொடுக்கப்படுகிறது.

தற்போது அமெரிக்கா சோயாபின்ஸ் ஏற்றுமதி செய்வதற்கு 26 சதவிகித கூடுதல் வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு சதவிகிதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சீனா சோயாபீன்ஸ் இறக்குமதியை 10 மில்லியன் மெட்ரிக் டன் வரை குறைக்க திட்டமிட்டுள்ளது.

சீனாவில் இருக்கும் பன்றிகளுக்கும் கோழிகளுக்கும் மாற்று வகை தீவனத்தை கொடுக்க சீனா முடிவு செய்துள்ளது.

இந்த நெருக்கடி நிலையால் சீன வியாபாரிகள் இந்தியா, அர்ஜென்டினா, பிரேசில் நாடுகளில் இருந்து சோயாபீன்ஸை இறக்குமதி செய்ய ஆலோசனை செய்துவருகின்றனர்.