என்னை அணியில் இருந்து நீக்கியது ஏன்?. கடுப்பில் முரளி விஜய்!

இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரராக இருந்த முரளி விஜய் டெஸ்ட் அணியில் இருந்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டார்.

இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் தேர்வு குழுவினர்கள் தன்னிடம் பேசவில்லை என குற்றம்சாட்டியுள்ளார் இந்திய வீரரான முரளி விஜய். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த முரளி விஜய், பார்மவுட் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது நடைபெற்றுவரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலும் இவர் இடம்பெறவில்லை. இதனையடுத்து முரளிவிஜய், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் என்னை தேர்வுக்குழு தலைவரோ, உறுப்பினர்களோ யாரும் பேசவில்லை என கூறினார்.

அணி வீரர்கள் தேர்வுக்கு எந்த மாதிரியான அளவுகோல் கடைபிடிக்கப்படுகிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது என ஹர்பஜன்சிங் கூறிய கருத்தை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஒரு வீரரை நீக்கினால் அதற்கான காரணத்தை தெரிவிப்பது மிக அவசியமானது என கூறினார்.

அடுத்து நடக்கும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலாவது தனக்கு இடம் கிடைக்குமா என காத்து இருக்கிறார் முரளி விஜய். அவர் அதற்கான பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார்.