விஜய் ரசிகர்கள் சிலர் மிக அசிங்கமாக டுவிட்டரில் பேசுவதால்தான் விஜய்யை வெறுக்க ஆரம்பித்துவிட்டதாக நடிகர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2ஆம் தேதி சர்க்கார் ஆடியோ வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.அப்பொழுது ரசிகர்கள் மத்தியில் பேசிய விஜய், இந்த படத்தில் நான் முதல்வராக நடிக்கவில்லை, ஒருவேளை நான் முதல்வரானால் நடிக்க மாட்டேன். நாட்டில் ஊழலை ஒழிக்க முயற்சி செய்வேன் என தன் அரசியல் வருகைக்கு அஸ்திவாரம் போடும்வகையில் பேசினார்.
இதனை விமர்சிக்கும் வகையில் நடிகர் கருணாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த குட்டிக் கதை தலைவர்களுக்கு மட்டுமா அல்லது நடிகர்களுக்குமா? உங்களின் ரசிகர்களை கெட்ட வார்த்தைகள் பேசாமல் இருக்கச் சொல்லுங்கள் நண்பா நண்பி. நீங்கள் சொல்வதை அவர்கள் கேட்கிறார்களா என்று பாருங்கள். அவர்களை திட்டி, வெறுப்பை காட்ட வேண்டாம் என்று கூறுங்கள் பதிவிட்டுள்ளார் .
மேலும் கடுப்பாகுது என்று கூறிய விஜய் ரசிகரிடம் கடுப்பாவுதுன்னா கம்முன்னு இருக்கணும் அப்போ தான் லைஃப் ஜம்முன்னு இருக்கும் ப்ரோ என்று சர்கார் விழாவில் விஜய் தெரிவித்த வசனத்தையே பதிலாக கூறியுள்ளார்.
இதனால் விஜய் ரசிகர்கள், சமூக வலைதளத்தில் கருணாஸை கடுமையாக திட்டி வருகிறார்கள்.
Is Kutty Kadhai only for leaders or also for actors ask your fans to not be abusive nanba Nanby and check if they listen .Plz ask them not to be abusive and hateful #Peace bro
— Karunakaran (@actorkaruna) October 3, 2018
Kaduppavudhu na Gammunu irukkaanum appo Thaan Life Jammunu irukkum bro https://t.co/yq8JdbMg4k
— Karunakaran (@actorkaruna) October 3, 2018