மகன் செய்த செயல்…. தாய், தந்தை இருவரும் தற்கொலை!

கரூர் மாவட்டம் எல்.ஜி.பி. நகரை சேர்ந்தவர் பாபு 45 வயது நிரம்பிய இவர் கோர்ட்டில் குமாஸ்தாவாக பணியாற்றி பின்னர் விருப்ப ஓய்வுபெற்று, வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

பாபு தனக்கு அரசு அதிகாரிகள் பலரை தெரியும் எனவே என்னால் எளிதாக அரசு வேலை வாங்கி தரமுடியும். அந்த வேலையை வாங்குவதற்கு முன்பணம் கொடுத்தால் எளிதாக வேலை வாங்கித்தரமுடியும் என பொதுமக்களிடம் கூறியுள்ளார்.

பாபு கூறியதை நம்பி, இளைஞர்கள் பலர் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர். இதன் மூலம் பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளார் பாபு.ஆனால் அவர் நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.

நீண்ட நாட்களுக்கு எதாவது கரணம் கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டது பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதனால் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த இளைஞர்கள், பொதுமக்கள் பலர் தங்களுக்குரிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டு வந்துள்ளனர்.

பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி செய்ததை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற பாபு, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அரசு வேலைக்காக பணம் கொடுத்தவர்கள், தொடர்ந்து பணத்தை கேட்டு வற்புறுத்தி வந்ததால் அவர் தலைமறைவானது பணம் கொடுத்த இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரியவந்தது.

அவர் தலைமறைவானதை அடுத்து பணத்தை கொடுத்து ஏமாந்த பலர், பாபுவின் பெற்றோர்களிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டு வந்துள்ளனர். தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் அவர்கள் மனமுடைந்தனர். இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் பாபுவின் பெற்றோர்கள் தங்களது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டனர்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளனர்.