நாளை முதல் தூர சேவை பேருந்துகளுக்கு இணையத்தளம் ஊடாக ஆசன முன்பதிவு வசதி

தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு இணையத்தளம் ஊடாக ஆசனங்களை முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.

தேசிய போக்குவரத்து சபையின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமச்சந்திர இதனைத் தெரிவித்துள்ளார்.

நாளை(திங்கட்கிழமை) முதல் இந்த வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

35 மார்க்கங்களுக்கு இந்த சேவை அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.

இதற்கு பேருந்து கட்டணத்திற்கும் மேலதிகமாக 30 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களை WWW.NTC BOOKING.LK என்ற இணையத்தளத்தினூடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.