அதிமுகவோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நெருங்கி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியது திமுகவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
சென்னை தங்கசாலையில் அமைந்துள்ள சென்னையில் முன்னாள் மேயர் சிவராஜின் 127ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தமிழக அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் நாளை நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் 5 லட்சம் முதல் 7 லட்சம் பேர் வரை உறுதியாக கலந்து கொள்வார்கள் என கூறினார்கள். .
விழா அழைப்பிதழ் அனைவருக்கும் பாகுபாடின்றி அனுப்பப்பட்டுள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அழைத்தால் தானும் பங்கேற்பேன் என தொல்.திருமாவளவன் கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய ஜெயக்குமார் இதன் மூலம் திருமாவளவன் எங்கள் பக்கம் நெருங்கி வருவதையே இது காட்டுவதாகக் கூறினார்.
2016 மக்கள் நல கூட்டணி படுதோல்விக்கு பிறகு திமுகவே கத்தி என்று இருக்கும் திருமாவளவன் அதிமுக பக்கம் சென்றால் அது நிச்சயமாக திமுகவை பாதிக்கும். ஏனெனில் வடதமிழகத்தில் வலுவாக இருக்கும் பாமகவை அவ்வப்போது சீண்டுவதற்காகவே திருமாவளவனை முக ஸ்டாலின் எப்போதும் அருகில் இருப்பதையே விரும்புகிறார் என்பது திமுகவினர் பேசிக்கொள்வது தான்..






