அழகிரிக்கு எதிராக களமிறக்கப்படும் பெண்..?

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

அப்பா இருக்கும் வரை தான் என்னை கட்சியில் சேர்த்துக்கொள்ளவில்லை. இப்போதாவது சேர்த்துக்கொள்ளுங்கள் என்று அழகிரி பணிவாக கேட்டுள்ளார்.

அதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாத திமுக தலைமை அவரை புறக்கணித்து வந்துள்ளது. இப்போது அதிமுக இரண்டு பாகங்களாக பிரிந்ததை போல, திமுகவும் ஆகி விடக்கூடாது என்று தான் இன்னமும் அழகிரி பொறுமை காத்து வருகிறார்.

இருந்த போதிலும் ஸ்டாலின் இறங்கி வருவதை போல தெரியவில்லை. இதனால் கடும் மன வருத்தத்தில் இருந்த அழகிரி, அப்பா பலமுறை ஜெயித்த ஊர், தான் பிறந்த ஊரான திருவாரூரில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்று களமிறங்கியுள்ளார்.

அதில் பெரும் வெற்றியின் மூலமாக திமுகவின் கதவுகள் திறக்கும் என்று கணித்துள்ளார். அதே போலவே திருவாரூர் தேர்தலை அழகிரி பக்கம் சாய விட்டால் அடுத்து இனி எல்லா இடங்களிலும் அவர் ஆளுமை வந்து விடும் என்று திமுக தரப்பு அஞ்சுகிறது.

இதற்காக நீ முந்தி, நான் முந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர்.

அழகிரி இறங்குவதால் குடும்ப உறுப்பினர்கள் யாரையும் திருவாரூர் தொகுதியில் ஸ்டாலின் களமிறக்க மாட்டார் என்று தெரிகிறது.

என் பொறுமையை மேலும் சோதித்தால், அடுத்தகட்ட நிலைக்கு செல்லக்கூட தயங்க மாட்டேன் என்று அழகிரி எச்சரித்துள்ளதால் திமுக மாற்று திட்டத்தை கையில் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒருவேளை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் கருணாநிதி மகள் செல்விக்குத் திருவாரூரில் சீட் கேட்கும் முடிவில் உள்ளனர் குடும்ப உறுப்பினர்கள் சிலர்.

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ‘கருணாநிதி போட்டியிட்டபோது, அவருக்காக வீடுதோறும் சென்று வாக்கு சேகரித்தவர் செல்வி.

ஒருவேளை இந்தத் தொகுதியில் அழகிரி போட்டியிட நினைத்தால், செல்விக்கு எதிராக அவர் வேட்புமனுத்தாக்கல் செய்ய மாட்டார். அந்தளவுக்கு செல்வி மீது அவர் பாசம் வைத்திருக்கிறார் அழகிரி.