யாழ் நகரில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை….!! 14 வருடங்களின் பின் வாக்கு மூலம் பதிவு….!!

2004ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்ட மூவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகள் யாழ். நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்ட மூவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

மேலும், விரைவில் முழுமையான விசாரணை அறிக்கை மன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.2004ஆம் ஆண்டு வல்வெட்டித்துறை கரணவாய் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் பிரசவத்துக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இதன்போது, தனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாகவும் மகப்பேற்று நிபுணர்களின் உதவியுடன் தன்னுடைய ஒரு குழந்தை கடத்தப்பட்டுள்ளதாகவும் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணைகள் தற்போது யாழ். நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது.

இதன்போதே வழக்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குப் பாரப்படுத்துமாறும் இது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுமாறும் நீதிவான் கட்டளை பிறப்பித்திருந்தார்.இதையடுத்தே, குறித்த வழக்கின் முழுமையான விசாரணை அறிக்கை விரைவில் மன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று அறிவித்துள்ளனர்.