தோண்ட தோண்ட கிடைத்த பொக்கிஷங்கள்! போலீசார் குவிப்பு!

சென்னையில் பிரபல தொழிலதிபர் ரன்வீர் ஷா என்பவரின் வீட்டில் தோண்ட தோண்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டதால் திடீர் பரபரப்பு உருவாகியுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் வசிக்கும் தொழிலதிபர் ரன்வீர் ஷா என்பவரின் வீட்டில் சிலைகள் இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில், அவர் வீட்டில் சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் சிலைகளை வாங்கி வெளிநாட்டுக்கு விற்றதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர் வீட்டில் அதிரடி சோதனை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. வீட்டை இடித்து சோதனை செய்ததில் 60க்கும் மேற்பட்ட சிலைகளும் அறிய கல் தூண்களும் கிடைக்கப் பெற்று உள்ளன. இதில் நான்கு ஐம்பொன் சிலைகளும் இருக்கின்றது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் இந்த சோதனையை செய்து சிலைகளை கண்டுபிடித்துள்ளனர். தோண்டத் தோண்ட சிலைகள் கிடைப்பதால் சென்னையில் திடீர் பரபரப்பு உருவாகியுள்ளது.