சைக்கோ கணவனின் வெறிச் செயல்…..! கொடுமையின் உச்சம்…..!

சந்தேக புத்தி கொண்ட சைக்கோ கணவனின் வெறிச் செயல்…..! அவன் செய்த பாதக செயல், கொடுமையின் உச்சம்…..!

தஞ்சை மாவட்டம், செங்கிபட்டி அருகே உள்ள புதுக்குடி கீழத்தெருவைச் சேர்ந்தவர், ஆறுமுகசாமி (வயது 33). இவர் திருவெறும்பூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவியின் பெயர் ஷீலா (வயது 26). இந்த தம்பதியருக்கு, இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. ஷீலா கலகலப்பான சுபாவம் உடையவர். அதனால், அக்கம் பக்கத்தில், எல்லோரிடமும் சகஜமாகச் சிரித்துப் பேசுவார்.

இது அவரது கணவர் ஆறுமுகசாமிக்குப் பிடிக்கவில்லை. இதனால், தன் மனைவி மீது, எப்போதும் சந்தேகப் பட்டுக் கொண்டிருப்பார் ஆறுமுகசாமி. அதனால், கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறது.

பல முறை, ஷீலாவின் பெற்றோர், வந்து சமாதானம் செய்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான், இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவம் முடிந்து, சமீபத்தில் தான், ஷீலா கணவன் வீட்டிற்கு வந்தார்.

ஆனால், ஆறுமுகசாமி மாறவில்லை. ஒரு சைக்கோ போலவே நடந்து கொண்டிருக்கிறார். வேலை முடிந்து, இரவு வீட்டிற்கு வந்ததும், மீண்டும் மனைவியுடன் சண்டை போட்டிருக்கிறார்.

பின், நள்ளிரவில், துாங்கிக் கொண்டிருந்த போது, தன் மனைவி ஷீலாவின் வாயைப் பொத்தி, அரிவாளால், அவர் தலையை வெட்டினார். இதனால், சத்தம் போட இயலாமல், அப்படியே துடித்து, இறந்து போனார், ஷீலா. அத்துடன் அந்த சைக்கோ நின்று விடவில்லை. பிறந்த 3 மாதக் குழந்தையின் முகத்தில், தலையணையை வைத்து அழுத்துக் கொன்று விட்டான், இந்தக் கொடூரன்.

பின், வீட்டிலிருந்து தப்பிச் சென்று விட்டான். ஷீலாவின் பெற்றோர், தங்கள் மகன் மற்றும் பேரனைக் கண்டு, அலறினர்.

போலீசார், சைக்கோ ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.