தூங்கும்முன் வெங்காயச் சாற்றை 2 நிமிடம் பாதங்களில் தேயுங்கள்!

வெங்காயத்தில் ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாதுக்கள், மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளதால், இது பல்வேறு பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது.

அத்தகைய வெங்காயத்தின் சாற்றை தினமும் இரவு தூங்கும் முன் பாதங்களில் தேய்த்து 2 நிமிடங்கள் மசாஜ் செய்து வர வேண்டும்.

நன்மைகள்
  • வெங்காய சாற்றில் உள்ள ஃபாரிக் ஆசிட், நம்முடைய பாதம் மற்றும் உள்ளங்கைகளின் வழியே ஊடுருவி மூளைக்குச் சென்று, மூளையின் சுறுசுறுப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.
  • வெங்காயத்தில் உள்ள ஃபாரிக் ஆசிட் பாதம் வழியே உறிஞ்சப்பட்டு, உடலின் தலை முதல் கால் வரை ரத்தோட்டத்தை சீராக்க உதவுகிறது.
  • குடல், சிறுநீர்ப்பை, சிறுநீரகக் கற்கள், முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளை தடுத்து, உடலில் உள்ள கொழுப்பை குறைத்து, பாதத்தில் உள்ள திசுக்களை ஈரப்பதத்துடன், சொரசொரப்பின்றி வைக்க உதவுகிறது.
  • கால்களில் வியர்வை அதிகரிப்பதால், ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்க வெங்காயச் சாற்றை பாதங்களில் தேய்ப்பது மிகவும் நல்லது.