பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகளை எந்தவொரு வெளிநாட்டிற்கும் வழங்கப்போவதில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். A320 ரக விமானங்களைத் தரையிறக்கும் வகையில் விமான ஓடுதளத்தை புனரமைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்கு தேவையான நிதியை வழங்க சிவில் விமான சேவை அதிகாரசபை மற்றும் அபிவிருத்தி சபை என்பன இணங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர்,

இதேவேளை, பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.இந்நிலையில், அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது