வயது முதிர்ச்சி அடையாமல் காதலித்தால் இப்படித் தான் நடக்கும்…..! கொடைக்கானலில் நடந்த விபரீதம்…..!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ் மலைப் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 19). இவரும், இதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியும் காதலித்துள்ளனர். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட, அந்தப் பெண்ணின் பெற்றோர்கள், இவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், இந்த காதலர்கள், யாருக்கும் தெரியாமல், கொடைக்கானலுக்குச் சென்று விட்டனர். அங்குள்ள வினோத்தின் உறவினர் ஒருவர் வீட்டில், இருவரும் தங்கியிருந்தனர். அவர்கள், இந்த தகவலை, வினோத்தின் குடும்பத்திற்கு தெரியப் படுத்தினர்.
ஏற்கனவே, பெண்ணைக் காணோம் என்று தேடியவர்கள், அவர்கள் கொடைக்கானலில் இருப்பதை அறிந்து, கொடைக்கானலுக்கு வந்து, வினோத்தினை சரமாரியாகத் தாக்கி உள்ளனர்.
இதனால், மனம் உடைந்து, உணர்ச்சி வசப்பட்ட வினோத், தன் உறவினர் வீட்டிலிருந்து அரிவாள்மனையை எடுத்து வந்து, வேகமாக, தன் கழுத்தை அறுக்கத் துவங்கினான். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த, அக்கம் பக்கத்தினர், அந்தப் பையனை மீட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தற்போது, வினோத், அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் ஆபத்தான கட்டத்திலே இருப்பதாக, டாக்டர்கள் கூறி வருகிறார்கள். இந்த விவகாரத்தினால், வினோத்தின் குடும்பத்தினர், கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.