பிரிட்ஜில் வைத்த உணவை சாப்பிடலாமா? சோதிக்கும் எளிய முறை

பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் விடுமுறை நாட்களையொட்டி தான் வெளியில் செல்ல திட்டம் போடுவார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு இந்த செயல்முறை முக்கியமானதாக கருதப்படும்.

சமையல் செய்த உணவு கெட்டுப்போகாமல் இருப்பதற்குத் தான் நாம் ஃபிரிட்ஜில் வைக்கிறோம். ஆனால், அதற்கு போதுமான மின்சாரம் இல்லையென்றால், கெட்டுப்போகும்.

இதன் காரணமாக, வெளியூர் செல்வதாக இருந்தால், உணவை பிரிட்ஜில் வைப்பதை கைவிட வேண்டும்.

  • வீட்டில் பவர் இல்லையென்றால், உணவில் சால்மோனெல்லா உள்பட பல பாக்டீரியாக்களை பரவச் செய்யும். இதனால், உடல்நலம் பாதிக்கப்படும். வீட்டில் பவர் இல்லையென்றால், பிரிட்ஜில் நாம் வைத்த உணவு குறைந்தது 4 மணிநேரம் கெட்டுப்போகாமல் இருக்கும். இதற்கு பிரிட்ஜில் இருக்கும் குளிர்ச்சியான வெப்பநிலை தான் காரணம்.
  • இதுவே பிரீசரில் உணவை வைத்து ப்ரீசர் குளிர்ச்சியில் இருந்தால், இரண்டு நாட்கள் உணவு கெட்டுப்போகாமல் இருக்கும். இதுவே, பாதி குளிர்ச்சியில், இருந்தால், ஒரு நாள் மட்டும் கெட்டுப்போகாமல் இருக்கும்.
  • ஒரு கண்ணாடி டப்பாவில், தண்ணீர் பிடித்து, அதனை ப்ரீசரில் வைத்து நன்கு உறைய வைக்க வேண்டும். அதன் பிறகு வெளியூர் செல்லும் நேரத்தில் ஒரு கப்பின் மேல் ஒரு நாணயத்தை வைத்து அதனை மறுபடியும் ப்ரீசரில் வைக்க வேண்டும்.
  • அதன் பிறகு வெளியூருக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது, நாணயம் எங்கு இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.
  • ஒரு வேளை நாணயம் கப்பின் மேல் பகுதியிலோ அல்லது நடுவிலோ இருந்தால், சிறிது நேரம் மட்டும் தான் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். இதுவே, நாணயம் கப்பின் அடிப்பகுதியில் இருந்தால், ரொம்ப நேரமாகவே மின்சாரம் இல்லை என்று அர்த்தம். இப்படியிருக்கும் சமயத்தில், பிரிட்ஜில் வைத்திருந்த உணவை சாப்பிடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.<