ஆசை வார்த்தை கூறிய மாணவன்!. கர்பை பறிகொடுத்த மாணவி!.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த, பிரவீன் எனும் கல்லூரி மாணவன் அதே பகுதியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை மாணவியை காதலித்து வந்துள்ளார்.

அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, நான் தான் உன்னை திருமணம் செய்துகொள்வேன், உன்னையும் என்னையும் யாராலும் பிரிக்கமுடியாது. எனக்கு எல்லாமே நீதான் என மயக்கும்படி அந்த சிறுமியிடம் பேசி, மாணவியை கட்டாய படுத்தி உல்லாசமாக இருந்துள்ளார்.

பள்ளியில் படிக்கும் சிறுமி என்று கூட பாராமல் அந்த இளைஞன் செய்த தவறால் பள்ளி மாணவி கர்ப்பமடைந்தார்.மாணவி கர்பம் அடைந்த விஷயம் மனைவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. சம்பவம் அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்

இதனையடுத்து அதிர்ச்சியில் உறைந்துபோன மாணவியின் பெற்றோர்கள் அப்பகுதி மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று இதுகுறித்து புகார் அளித்தனர். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் பிரவீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமையால் அப்பகுதி மக்கள் பெரும்அதிர்ச்சியடைந்தனர்.