பருப்பு நீர் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் :
அரிசி – 1/5 கப்
பாசிப் பருப்பு – 1 மேஜைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 மேஜைக்கரண்டி
தேங்காய் – அரை கப்
உப்பு – தேவையான அளவு
நீர் – தேவையான அளவு

செய்முறை :
* பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பை வெறும் கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
* அரிசியை 3 மணி நேரங்கள் ஊற வைத்து நீரை வடித்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
* அரைத்த அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வறுத்து வைத்துள்ள பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு, உப்பு, தேங்காய் துருவல் போட்டு நன்றாக பிசைந்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில நீர் விட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
* கொழுக்கட்டை வெந்ததும் அதனை எடுத்து பரிமாறவும்.
* சுவையான பருப்பு நீர் கொழுக்கட்டை ரெடி.
* இந்த கொழுக்கட்டை வயதானவர்கள், டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.