நல்லூர் தேர்த்திருவிழாவில் திடீர் மாரடைப்பு…..!! பக்தர் மரணம்….!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்ட சிங்கள பக்தரொருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

தனது உறவினர்கள் சகிதமாக நல்லூர்க் கந்தசுவாமி தேர்த் திருவிழாவில் கலந்து கொண்ட அவருக்கு ஆலய வளாகத்தில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்துக் குறித்த பக்தரை அவரது உறவினர்கள் அழைத்த்துச் சென்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.எனினும்,சில நிமிடங்களில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உயிரிழந்தவரின் சடலம் நேற்றைய தினம்(09) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்தில் அம்பாறை ஹிராணவ பதியந்தலாவ பகுதியைச் சேர்ந்த முதியன் சலாகே குணவர்தன(வயது- 66) என்ற பக்தரே உயிர் நீத்தவராவார்.