என்ன நடக்கும் தங்கத்தை உப்புக்குள் வைத்தால்?

நடைமுறையில் பல சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் நல்ல பலன்களை தரக்கூடியவை என்று நம்பப்படுகின்றன.

மேலும் நமது வழக்கத்தில் கடைப்பிடிக்கப்படும் சில சம்பிரதாயங்களும், அதன் பலன்களை பற்றி அறிந்து கொள்வோம்.

தங்கத்தை உப்பில் வைத்தல்
  • புதிதாக தங்கம் வாங்கியதும் அதனை ஒரு சுத்தமான வெள்ளை துணியில் கட்டி அதில் சிறிதளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் புதைத்து வைத்து விடுங்கள். இதனால் தங்கத்தின் மீது உள்ள தோஷங்கள் அத்தனையும் நீங்கும்.
புத்தாடைகளில் மஞ்சள் தடவுதல்
  • புத்தாடை அணியும் போது அதன் ஓரங்களில் மஞ்சள் தடவி அணிய வேண்டும். இதனால் தோஷம் நீங்கும். அதுமட்டுமின்றி, புத்தாடையில் மஞ்சள் தடவி அணிந்தால், துணிகள் பெருகும் மற்றும் ஆடை பஞ்சம் வராது.
கொடி மரத்தின் தெய்வ சக்தி
  • வானுலகில் உலவும் கிரகங்களின் ஆற்றல்களை தனக்குள் கிரகித்து வைத்திருக்கிறது கொடி மரம். கொடிமர தரிசனம் செய்தால் நம் பாவங்கள் நீங்கி இறைவனுடைய அருளாசியை பரிபூரணமாக பெறலாம்.
தென்திசையை பார்த்து உட்காரலாமா?
  • தென்திசையை பார்த்தபடி அதிக நேரம் உட்காரகூடாது. அத்திசை யமதர்மராஜாவுக்கு உகந்தது. இறந்தவர்களுக்கு தர்பணம் கொடுக்கும் போது மட்டும்தான் தென்திசையை நோக்கி உட்கார வேண்டும.
  • சுபநிகழ்ச்சி நடக்கும் போதும் தெய்வீக யாகங்கள் செய்யும்போதும் தென்திசையை நோக்கி உட்காரக்கூடாது.
தங்கம் சேர
  • அட்சய திருதி அன்று தங்கம் வாங்கினால் மட்டும் தான் தங்கம் சேரும் என்பதில்லை. புதன், வெள்ளி கிழமைகளில் இந்த நட்சத்திரமும் சேர்ந்ததுபோல இருக்கும் நாட்களில் நகை வாங்கினால் உங்களைவிட அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை.
  • பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரம் வரும் நாட்களில் சுக்கிரன், புதன் ஹோரையில் ஒரு கிராம் தங்கநகை வாங்கினாலும் கூட தங்க நகை அதிகம் வாங்கும் யோகம் வரும்.
நெல்லிக்காயை தேய்த்து குளித்தல்
  • நெல்லிமரம், ஸ்ரீமகாலஷ்மியின் உள்ளங்கையில் உருவானது. ராஜயோகம் வேண்டும் என்றால் நெல்லிக்கனியை தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.
  • பெருமாளுக்கு உகந்த தினமான ஏகாதசி அன்று நெல்லிக்காயை தேய்த்து குளித்தால் இராஜயோகம் உங்களை தேடி வரும்.