மாம்பழம் கிடைக்க உலகை சுற்றி வர சிவனும் பார்வதியும் சொன்ன போது தந்திரமாக பெற்றோர்களை சுற்றி வந்து பழத்தை வாங்கிய சாமர்த்தியசாலியே பிள்ளையார்.ஆனால், வெளிநாட்டில் பிள்ளையார் போல் வேடமிட்டு பிச்சை எடுக்கும் காட்சி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
நபர் ஒருவர் பிள்ளையார் வேடம் தரித்து சம்மணமிட்டு அந்தரத்தில் அமர்ந்திருக்கிறார். இது காண்போருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனை அவதானித்து குழம்பிய மக்கள் உண்மையை தெரிந்துகொள்ள பல்வேறு முயற்சிகள் செய்தும் முடியவில்லை.ஆனால் சிலர் புகைப்படம் எடுப்பது, கைகொடுப்பது என பொழுதுபோக்காவும் எடுத்துக் கொள்கின்றனர்.
எப்படியெல்லாம் பிழைத்துக் கொள்கிறார்கள் என்பதற்கு இது நல்லதொரு உதாரணம். கடவுளை வைத்து பிழைக்கத் தெரிந்த மனிதன். பிள்ளையாருக்கே ஆப்பு என்றால் இந்த உலகம் இனியும் தாங்காதப்பா.