கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்திலிருந்து பதின்ம வயது சிறுமியொருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், குறித்த பகுதிக்கு விரைந்துள்ள பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவ இடத்திலிருந்து சிவில் பாதுகாப்பு அதிகாரிகளின் சீருடை இடுப்புப்பட்டி மற்றும் பேனா ஆகிய தடயப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பில்மேலதிக விபரங்கள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன.