ஒரு கிலோ அரிசியின் விலை 25 இலட்சம்

வெனிசுவேலாவின் பணமதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் அந்நாட்டிற்கான புதிய பணத்தை அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ விரைவில் வெளியிடவுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு வெனிசுவேலாவின் பணவீக்கம் 10 இலட்சம் சதவீதத்தை தொடும் என்று சர்வதேச செலாவனி நிதியம் கணித்துள்ளது.

வெனிசுவேலாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக அந்நாட்டின் பணமான பொலிவரின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதனால் அந்த நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களை வாங்க எவ்வளவு பணம் செலவிடவேண்டும் என்பதை அந்தப் பொருளையும், அதற்காக செலவிடவேண்டிய பணத்தையும் பக்கத்தில் பக்கத்தில் அடுக்கிவைத்து படமெடுத்து விளக்கியுள்ளனர்.

அந்த வகையில் ஒரு கிலோ தக்காளியின் விலை  50 இலட்சம் பொலிவர்கள்,

வெனிசுவேலாவின் தலைநகர் கராகஸில் 2.4 கிலோ கோழிக்கறி விலை 1.46 கோடி பொலிவர் (2.22 டாலர்கள்).

கடந்த வியாழக்கிழமை ஒரு கழிப்பறை தாள் உருளை 26 இலட்சம் பொலிவர்களுக்கு விற்கப்பட்டது.

இந்த கேரட்டுகளின் விலை 30 இலட்சம் பொலிவர்கள்.

வெனிசுவேலாவின் புதிய பணம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், அதுசார்ந்து நிலவும் குழப்பங்கள், கவலைகள் காரணமாக அந்நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைக்கத் தொடங்கியுள்ளனர்.

ஒரு கிலோ அரிசியின் விலை 25 இலட்சம் பொலிவர்கள்.

“கடந்த ஜூலை மாதம் வெனிசுவேலாவின் பணவீக்கம் 82,700 சதவீதத்தை எட்டியது.

ஒரு பாக்கெட் சானிட்டரி நாப்கின்களுக்கு 35 இலட்சம் பொலிவர்கள் செலவிட வேண்டியிருக்கும்.

ஒரு கிலோ பாலாடைக்கட்டியின் விலை 75 இலட்சம் பொலிவர்கள்.

குழந்தைகள் அணியும் நேப்பிஸ் விலை 80 இலட்சம் பொலிவர்கள்.

ஒரு கிலோ மாட்டுக்கறியின் விலை 95 இலட்சம் பொலிவர்கள்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.