நயன்தாராவை பாராட்டிய பிரபல ஒளிப்பதிவாளர்..!

பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், ‘இமைக்கா நொடிகள்’ நயன்தாராவின் நடிப்பைப் பார்த்து பாராட்டியுள்ளார்.

டிமான்டி காலினி என்ற திகில் ஹிட் படத்திற்கு பிறகு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அடுத்து வெளிவரவுள்ள படம் “இமைக்கா நொடிகள்”.

தொடர் கொலைகளை செய்யும் சைக்கோ கொலைகாரனை பிடிக்கும் காவல் அதிகரியை பற்ற படமாக “இமைக்கா நொடிகள்” உருவாக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதி, அதர்வா, ராஷி கண்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில், “லேடி சூப்பர் ஸ்டார்” நயன்தாரா ஒரு குழந்தைக்கு அம்மாவாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

அநேகமாக பில்லாவிற்கு பிறகு, முற்றிலும் அதிரடியான கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருக்கும் 2வது படம் “இமைக்கா நொடிகள்”.

முற்றிலும் திகில் கலந்த த்ரில்லர் படமாக தயாராகியுள்ள “இமைக்கா நொடிகள்” இந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.

இந்தப் படத்தின் நயன்தாரா நடிப்பைப் பெற்றி ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் கூறியுள்ளார், “நயன்தாரா வெறும் மேக்கப் போட்டுக்கொண்டு மட்டும் கேமரா முன்பு வருவதில்லை. அதன் மொழியைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப தன்னை சரியாக வெளிப்படுத்தும் திறமை வாய்ந்தவர்” எனப் பாராட்டி உள்ளது.