இ-மெயில், இன்டர்நெட் என பிஸியா இருக்கும் காலத்தில் 1 கோடி பெண்களுக்கு கடிதம் எழுதிய முதல்வர், திக்குமுக்காடி போன தபால்காரர்கள்.!

ரக்ஷா பந்தனை முன்னிட்டு மத்திய பிரதேச முதல்வர் 1 கோடி பெண்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக மத்திய பிரதேசத்தில்,பாஜகவின் ஆட்சியில் சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார்.

இந்த நிலையில் ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் உள்ள 1.1 கோடி பெண்களுக்கு வாழ்த்துக் கூறி அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற ஆசி வழங்கும்படியும் குறிப்பிட்டுள்ளார்

மேலும் அதற்காக 4 கோடி ரூபாய் செலவாகியுள்ள நிலையில் பாஜகவே அதனை ஏற்றுக் கொள்ள இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இணையதளத்தின் முன்னேற்றம் அதிகரித்ததால் தபால்காரர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்நிலையில் முதல்வர் சவுகான் 1 கோடி பெண்களுக்கு கடிதம் எழுதி,அதை அனைத்து பெண்களையும் நேரில் சந்தித்து அளிக்க வேண்டும் என அவர் தபால் துறைக்கு உத்தரவிட்டுள்ளதால், தபால்காரர்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.

மேலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால்,அம்மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தில் இறங்க உள்ள முதல்வர் சவுகான் ரக்ஷா பந்தன் விழாவை அதற்காக பயன்படுத்தி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.