கேரளாவில்,மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஒட்டு மொத்த மாநிலமும் முடங்கிப்போயுள்ளது. தொடர்வண்டி போக்குவரத்து, மெட்ரோ ரயில், விமான போக்குவரத்து, பேருந்து சேவை, வாகனங்கள் செல்லும் வழித்தடம் என அனைத்தும் முற்றிலும் முடங்கியது.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வரலாறு காணாத மழையால் கடவுளின் தேசம் என்ற அழைக்கப்படும் கேரளா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் சாலைகள் அனைத்தும் சேதமடைந்தது.
பல்வேறு சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 357-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3.3 லட்சம் மக்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போய்விட்டனர். மீட்பு படையினர் இவர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், அடுத்துவரும் நாட்களில் மழை குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. அடுத்து வரும் 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழைக்கு பெய்ய வாய்ப்பில்லை. மேலும், படிப்படியாக கேரளாவில் மழை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.