இத்தாலியில் 2 ஆண்களால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட பிரித்தானிய பெண்ணுக்கு உதவி செய்வதாக கூறி மூன்றாவதாக மற்றொரு ஆண் துஸ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இத்தாலியின் Naples பகுதியில் இரவு நேர கேளிக்கை விடுதியில் இருந்து சாலையோரத்தில் சென்று கொண்டிருந்த, பிரித்தானியாவை சேர்ந்த 18 வயது இளம்பெண் 2 நபர்களால் காருக்குள் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் காரிலிருந்து வெளியில் தூக்கி வீசப்பட்ட அந்த பெண்ணுக்கு உதவி செய்வதாக கூறி அழைத்து சென்ற மூன்றாவது நபர், விடுதி அறைக்கு அழைத்து சென்று மீண்டும் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக முதலில் துஸ்பிரயோகம் செய்த இரண்டு பேர் மீது கற்பழிப்பு வழக்கு சுமத்தப்பட்டது. அதே சமயம் மூன்றாவது நபர் மீது பாலியல் வன்முறை வழக்கு தொடுக்கப்பட்டது.
இதனையடுத்து கைது செய்யப்பட்டிருந்த மூன்று பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்பொழுது சம்மந்தப்பட்ட பெண்ணின் அனுமதியுடனே தவறு நடந்ததாக நீதிமன்றத்தில் குற்றவாளிகள் கூறினார். பின்னர் இதனை விசாரித்த நீதிபதி மூன்று பேரையும் பிணையில் விடுவித்து அனுப்பினார்.







