சூப்பர் சிங்கரில் பங்கேற்று மக்கள் மனதில் பெரும் அளவில் இடம் பிடித்தவர்கள் ராஜலெட்சுமி செந்தில் தம்பதியினர். இவர்களுக்கு உலகளவில் தற்போது ரசிகர்கள் உருவாகிவிட்டனர். மேலும் செந்தில் சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர்கள் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் பல விடயங்களை கூறியுள்ளனர். இதில் செந்தில் முதலில் தன் கிராமத்தில் 8 வயதில் இருந்து பாடத் தொடங்கியதாகவும், ராஜலெட்சுமியின் தாத்தா கோயிலில் பஜனை பாடல் பாடும் போது பாடத்தொடங்கியதாக கூறினர்.
கருத்துக்கள் சொன்னால் யாருக்கும் சேருவதில்லை ஆனால் அதனை பாடலாக பாடினால் பலருக்கும் போய் சேருகிறது.
நெடுவாசல் போராட்டத்தில் கர்பபிணியாக இருந்தபோது அவர் விழிப்புணர்வை ஏற்படுத்த பாடல் ஒன்று பாடினார். அந்த சம்பவம் குறித்த பல தகவல்களை அவர் கூறியுள்ளார்.
மேலும் பல தகவல்களும், அவர்கள் முன்னேறிய கதைகள் பற்றி கூறியதை பார்க்க இந்த காணொளியை பாருங்கள்.