தளபதி விஜய் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். ஒரு பெரிய நடிகர், கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரம் வைத்திருப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இணங்க ஒரு நல்ல தலைவனாக இருந்து வருகிறார். அவரை ஒரு உதாரணமாக வைத்து வாழ்வில் உயர்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
அண்மையில் விஜய்யுடன் சுறா படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசியுள்ளார் நடன இயக்குனர் ராபர்ட். அவர் அதில், விஜய் அவர்களுடன் சுறா படத்தில் பணிபுரிந்தது நல்ல அனுபவம்.
விஜய் அவர்களே அழைத்து அப்பாடல் வாய்ப்பு கொடுத்தார். நான் நன்றாக செய்ய வேண்டும் என்று தாறுமாறுமாக நடன அமைப்புகள் செய்தேன். வெளிநாட்டிற்கு போய் அங்கே தான் விஜய் அவர்கள் பாடல் காட்சிகளை பார்த்து 1 மணிநேரத்தில் ஆட ஆரம்பித்துவிட்டார்.
ஒரு கட்டத்தில் விஜய் அவர்களின் கையில் எல்லாம் ரத்தம் வர ஆரம்பித்துவிட்டது. படக்குழு பேசிக் கொண்டிருக்கும் போது நான் நடனம் அமைத்த நீ நடந்தால் அதிரடி பாடலுக்கு 3வது இடம் கொடுத்தனர், அதனால் வருத்தப்பட்டேன்.
காசி தியேட்டரில் என் பாடலுக்கு வந்த கைத்தட்டல் கேட்டு சந்தோஷப்பட்டபோது விஜய் அவர்கள் போன் செய்து மன்னித்துவிடு தவறாக கணக்கு போட்டுவிட்டேன், இது 3வது இல்லை முதல் இடம் என்று அவர் கூறியதாக பேசியுள்ளார்.