சிரந்­திக்கு வந்த அதிர்ஷ்டம்?

2020 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தரப்பில் கள­மி­றங்­க­வுள்ள வேட்­பாளர் குறித்து மீண்டும் கூட்டு எதிர்க்­கட்­சிக்குள் முரண்­பாடு வலுத்து வரு­வ­தாக அறிய

முடி­கி­றது. முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவை கள­மி­றக்­கு­வ­தற்கு அண்­மையில் மறை­முக இணக்கம் ஏற்­ப­டுத்­தப்­பட்ட போதும், அதற்­கெ­தி­ராக சில உறுப்­பி­னர்கள் போர்க்­கொடி தூக்­கி­யுள்­ளனர்.

இந்­நி­லையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பாரியார் சிராந்தி ராஜ­ப­க்ஷவை கள­மி­றக்­குது தொடர்பில் கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் கூட்டு எதிர்க்­கட்­சியை மையப்­ப­டுத்­திய தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் மூலம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு ஜனா­தி­பதி தேர்­தலில் மீண்டும் போட்­டி­யிட முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

ஆகவே 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் கூட்டு எதிர்க்­கட்சி சார்பில் போட்­டி­யி­ட­வுள்ள அபேட்­சகர் குறித்து பல சுற்றுப் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்று வந்­தன.

அதன்­போது முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ, முன்னாள் சபா­நா­யகர் ஷமல் ராஜ­பக்ஷ குறித்து அவ­தானம் செலுத்­தப்­பட்­டது.

எனினும் அம்­மூ­வரில் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவை கள­மி­றக்­கு­வது வெற்­றியை உறு­தி­செய்யும் என கூட்டு எதிர்க்­கட்­சிக்குள் பர­வ­லாக பேசப்­பட்டு வந்­தது.

எனினும் அதற்கு கூட்டு எதிர்க்­கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்­தன, வாசு­தேவ நாண­யக்­கார உள்­ளிட்ட தரப்­பினர் எதிர்ப்­பினைத் தெரி­வித்­தனர்.

இருந்­த­போ­திலும் நீண்ட சுற்றுப் பேச்­சு­வார்த்­தையின் பின்னர் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவை கள­மி­றக்­கு­வ­தற்கு கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்கள் மத்­தியில் மறை­முக இணக்­கப்­பாடு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

அதனைத் தொடர்ந்து போத்­தா­பய ராஜ­பக்ஷ நேரடி அர­சியல் வேலைத்­திட்­டங்­களில் பிர­வே­சித்தார்.

இந்­நி­லையில் கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குமா­ர­வெல்­கம உள்­ளிட்ட தரப்­பினர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­விற்கு எதி­ராக கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைத்­துள்­ள­துடன் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு அவர் தகு­தி­யற்­றவர் எனவும் தெரி­வித்­துள்­ளனர்.

ஆகவே ஜனா­தி­பதி வேட்­பாளர் சம்­பந்­த­மாக கூட்டு எதிர்க்­கட்­சிக்குள் எழுந்­துள்ள சிக்கல் கார­ண­மாக அந்த எதிர்க்­கட்­சி­யா­னது, ஒன்­றி­ணைந்த பொது­ஜன முன்­ன­ணி­யாக (எகா­பத்த பொது­ஜன பெர­முன) செயற்­ப­டு­வது குறித்தும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

இக்­கூட்­ட­ணியில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவும் ஒரு கட்­சி­யாக அங்கம் வகிக்­க­வுள்­ளது.

இதே­வேளை ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் எழுந்­துள்ள சிக்கல் கார­ண­மாக, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை மீண்டும் கள­மி­றக்­கு­வ­தற்­கான சட்ட ஏற்­பா­டுகள் குறித்து கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

எனவே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு சட்­டத்தில் இட­மி­ருப்­ப­தா­கவும் அதனை தற்­போது வெளிப்­ப­டுத்­தப்­போ­வ­தில்லை எனவும் கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டம் அனுமதிக்காது போகும் பட்சத்தில் அவரது பாரியார் சிராந்தி ராஜபக் ஷவை தேர்தலில் களமிறக்குவது சம்பந்தமாக கூட்டு எதிர்க்கட்சிக்குள் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அறிய முடிகிறது.