பிரபல தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் ஹிட்டடித்தது. அதில் ஒரு சீரியல் என்றால் தெய்வம் தந்த வீடு, இதில் நடித்த அனைவருக்குமே மக்களிடம் நல்ல ரீச்.
தன்னுடைய சினிமா பயணம் எப்படி செல்கிறது என்று இந்த சீரியலில் வில்லியாக நடித்த நிஷா பேட்டி கொடுத்துள்ளார்.
அதில், வில்லியாக நடித்தற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, ஆனால் தொடர்ந்து வில்லியாக நடித்தால் மனதளவில் ஒருவித அழுத்தத்தை கொடுப்பதோடு பொது வெளியில் எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும்.
கடை திறப்பு, சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் தெளிவாக வில்லி என்றால் வேண்டாம் என்கின்றனர். இதுபோன்ற விஷயங்களால் நல்ல வேடத்தில் நடிப்போம் என்று பார்த்தால் வீட்டில் தான் உட்கார வேண்டும். சீரியல் வாய்ப்பு எனக்கு தொடர்ச்சியா கிடைப்பது இல்லை பொருளாதாரை தேவைக்காக கிடைக்கும் வாய்ப்புகளில் நடிக்கிறேன் என்கிறார்.
றெக்க கட்டிப் பறக்குது மனசு சீரியலில் நடிக்கும் நிஷா இப்போது தொடங்கியுள்ள ஈரமான ரோஜாவே சீரியலிலும் வில்லியாக நடிக்கிறாராம்.