கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிரபல சிங்கள பாடகி படுகொலை!

பிரபல சிங்கள பாடகி பிரியானி ஜயசிங்க கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறையில் உள்ள அவருடைய வீட்டிலிருந்து நேற்று  பிரியானி ஜயசிங்க சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவரது வீட்டில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிரியானி ஜயசிங்க படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு ஜோடி கத்தரிக்கோலும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.மேலும் இந்த படுகொலை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த படுகொலை குறித்து பொலிஸார் மேலதிக தகவகளை வெளியிட்டுள்ளனர்.

பாடகி பிரியானி ஜயசிங்கவுக்கு 51 வயதாகும். மூன்று பிள்ளைகயின் தாயே  இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்டு உயிரிழ்ந்த பாடகிக்கும், அவரின் கணவருக்கும் ,டையில் நீண்டகாலமாக முறுகல் நிலை காணப்பட்டு வந்துள்ளது.

பாணந்துர அருக்கொட பிரதேசத்திலுள்ள அவரின் வீட்டில் நேற்றிரவு 8.45 மணியளவில் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொலையாளியை கைது செய்ய பாணந்துர தெற்கு பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.