உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள உன்னா எனும் பகுதியில் ஒரு பெண்ணை 3 வாலிபர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று வாலிபர்கள் சேர்ந்து ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக காட்டிற்குள் இழுத்து செல்கின்றனர்.
அந்த பெண் அவர்களிடம் தன்னை விட்டு விடும்படி கெஞ்சுகிறார். ஆனால், அதை ஏற்காமல் அந்த வாலிபர்கள் அவரை இழுத்து செல்கின்றனர். இதை மற்றொருவர் மொபைல் போனில் வீடியோவும் எடுக்கிறார்.
இந்த வீடியோ வெளியானதால் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கங்காகத் பொலிஸார் 2 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.






