இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த பெண்களிடம், தவறான முறையில் நடந்து கொண்ட இளைஞர் ஒருவர் தப்பிச் செல்ல முயற்சித்து போது விபத்துக்குள்ளாகியுள்ளார்.
தப்பிச் செல்லும் போது பேருந்தில் இருந்து விழுந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட போது, பெண்கள் கத்தி கூச்சலிட ஆரம்பித்துள்ள நிலையில், பேருந்தின் பின்பக்க கதவினால் கீழே இறங்கி தப்பி ஓட முயற்சித்த போதே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
புறக்கோட்டையில் இருந்து மத்துகம வரை பயணித்த பேருந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும் காயமடைந்த இளைஞனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு பயணிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இளைஞனை கைது செய்த பொலிஸார் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பேருந்தில் உள்ள பயணிகள் தன்னை பிடித்து தாக்குவார்கள் என்ற அச்சத்தில் தான் பேருந்தில் இருந்து குதித்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இளைஞன் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.