இளம் பெண் தூக்கிலிட்டுத் தற்கொலை…!!தென்மராட்சியை உலுக்கும் சோகங்கள்……!

தென்மராட்சிப் பகுதியில் பெண்ணொருவர்  இன்று காலை  தற்கொலை செய்துள்ளார்.

இன்று தென்மராட்சி நாவற்குளி 300 வீட்டுத் திட்டப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.29 வயதுடைய பெண்ணொருவரே வீட்டு முற்றத்தில் உள்ள மரமொன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அப் பெண் குறித்த மேலதிக விபரங்கள், ஏன் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்,  இல்லையேல் கொலை செய்யப்பட்டு தொங்க விடப்பட்டாரா என்பன தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.