2 வயது குழந்தையை தலைகீழாக தலையில் அடித்த கொடூரம்!! எதற்காக தெரியுமா?

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தன் இரண்டு வயது குழந்தையை தரையில் தலைகீழாக அடித்த கொடூர சம்பவம் மன்னார்குடியில் அறங்கேறியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சேர்ந்தவர் வேல்முருகன் (28). கூலித்தொழிலாளியான இவருக்கு அமுதா என்ற மனைவியும் அவந்திகா என்ற 2 வயது மகளும் உள்ளனர்.

மது அருந்தும் பழக்கம் கொண்ட வேல்முருகன் குடித்துவிட்டு மனைவியுடன் அடிக்கடி தகராறில் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று மனைவியுடன் தகாரறில் ஈடுபட்டுள்ளார். அபோது ஒரு கட்டத்தில் மகள் அவந்திகாவை தலைகீழாக தூக்கி அடித்துள்ளார்.

இதனால் குழந்தை அவந்திகா தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது அமுதா போட்ட சத்தத்தால் அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்து அவந்திகாவை மீட்டனர்.

பின் அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார் தப்பியோடிய வேல்முருகனை தேடி வருகின்றனர்.