அதிகம் ஏசி அறையில் இருப்பவரா நீங்கள்? கண்டிப்பா படிங்க!

இன்று நம்மில் அதிகமானோர் ஏசி அறையில் தான் தம் வாழ்நாளை செலவிடுகின்றனர். இதன் காரணமாக ஏற்படும் பக்கவிளைவுகளோ அதிகம்.

அண்மையில் நடைப்பெற்ற ஆய்வொன்றில் ஏசி அறையில் அதிக நேரம் இருப்பவர்களுக்கு உடல் நல பிரச்சனைகள் ஏற்படம் என கண்டறியப்பட்டுள்ளது.

ஏன் என்றல் ஏசி இல் இருந்து இயற்கை காற்றை பெற முடியாது. ஏசி காற்றில் இருந்து ஈரப்பதத்தை மட்டும் எடுத்து, அதை குளிர் காற்றாக மாற்றி வெளிவிடும்.

அலர்ஜி பிரச்சனை உங்களுக்கு இருந்தால்  ஏசி அறையில் நீங்கள் சுவாசிக்கும் காற்று உங்களுக்கு மேலும் சில பிரச்சனைகள் உண்டாக காரணியாக அமையும்.

சொறி, அரிப்பு, சளி, கண் எரிச்சல் போன்றவை உண்டாக ஏசி காற்று காரணமாக அமைகிறது. எனவே, முன்னவே அலர்ஜி இருப்பவர்கள் ஏசி காற்றை சுவாசிப்பதில் இருந்தும், ஏசி அறைகளில் இருந்தும் தள்ளியே இருப்பது நல்லது.

ஏசியை சரியான கால இடைவேளையில் சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால், லிஜினல்லா எனும் பாக்டீரியா தாக்கம் ஏற்படும்.

இது ஏசியில் மட்டுமே வளரக்கூடிய பாக்டீரியா ஆகும். இது சுவாவப் பாதையில் பரவும் பட்சத்தில் நிமோனியா உருவாகலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் வீட்டின் ஏசியின் பின் பக்கத்தில் பறவைகள் தங்கியிருந்தாலும் பிரச்சனை உண்டாகும். ஆம், பறவைகளின் கழிவுகள் மூலமாக கிரிப்டோக்காக்ஸ் எனும் பூஞ்சை வளர்கிறது.

இதனால், மனித மூளை பாதிக்கப்படுகிறது. மேலும், இதனால் கிரிப்டோக்காக்கல் மெனிஞ் சைட்டிஸ்” எனும் நோயும் உண்டாகலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏசி அறையில் அதிக நேரம் செலவிடும் நபர்களிடம் வைட்டமின் டி குறைபாடு தென்படுகிறது. இவர்கள் சூரிய வெளிச்சத்தில் இருந்து அதிகம் விலகி இருப்பதே இதற்கான முக்கிய காரணியாக திகழ்கிறது.

நீங்கள் ஏசிக்கு நேர் எதிராக அமர்ந்திருந்தால், மூக்கடைப்பு, தலைவலி, காது அடைத்திருப்பது போன்ற உணர்வு போன்றவை அதிகம் ஏற்படும். எனவே, அதிகம் ஏசி பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.