இந்திய சினிமா இல்லாமல், உலக சினிமாவே இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த படம் பாகுபலி. இப்படத்தின் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் தளபதி விஜய் சில வருடங்களுக்கு முன் சுப்ரமணியபுரம் படம் பார்த்து மிகவும் ரசித்தாராம், அதை தொடர்ந்து சசிகுமாரிடம் கதையும் கேட்டாராம்.
அப்போது ஒரு சரித்திர கதையை சசி சொல்ல விஜய் உடனே நடிக்கின்றேன் என கூறிவிட்டாராம், அப்படம் அப்போதே பல கோடி பட்ஜெட் இருந்ததாம்.
இதனால், சில வருடங்கள் போகட்டும் என்று விஜய் சொல்ல, அந்த கதையை சசி தற்போது முழுவதும் தயார் செய்துவிட்டாராம்.
விஜய்யும் அந்த கதையில் நான் எப்போது ரெடி என்று சொல்ல தமிழ் சினிமாவின் பாகுபலியாக இப்படம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.