மாயா நாகரிகத்தில் பணமாக பாவனையிலிருந்த சாக்லேட்!

ஒரு புதிய ஆய்வொன்று மாயா நாகரிகத்தில் சாக்லேட்டானது பணமாக பாவிக்கப்பட்டிருந்தமையை வெளிக்கொணர்ந்துள்ளது. மற்றும் இதன் இழப்பு மேற்படி நாகரீக வீழ்ச்சிக்கு காரணமாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதுபற்றி இவர் மேற்படி ஆய்வில் ஈடுபடாத மாந்தவியலாளர் David Freidel கூறுகையில், மேற்படி அய்வானது சரியான பாதையில் தான் உள்ளது, காரணம் சாக்லேட்டானது விலைமதிப்புள்ள உணவாகும், உண்மையில் அது ஒரு நாணயமாகும் என்கிறார்.

பண்டைய மாயா நாகரித்தினர் பணமாக நாணயங்களை பயன்படுத்தியதில்லை. பதிலாக மற்றைய ஆதி நாகரிகங்களைப் போல புகையிலை, சோளம் மற்றும் துணிவகைகள் போன்ற பண்டமாற்றில் ஈடுபட்டிருந்ததாக நம்பப்படுகிறது.

16 ஆம் நூற்றாண்டுப் பகுதியில் தொழிலாளர்கள் கோகோ பீன்ஸ் கொண்டு ஊதியமளிக்கப்பட்டிருந்தனர். இது சாக்லேட்டுக்குரிய அடிப்படைப் பதார்த்தமாகும்.

தற்போது மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வில் மாயா கால ஓவியங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருந்தன.

இதன்படி ஆதிய ஓவியங்களில் சாக்ஆலட்டானது பாிய அளவில் சத்தரிக்கப்பட்டிருந்திருக்கவில்லை. ஆனாலும் 18 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இது வழக்கத்திலிருந்திருந்தமை அறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.