பிரான்சில் பெயரீட்டு விழாவின்போது அழுத சிறுவனை கன்னத்தில் அறைந்து அமைதிப்படுத்திய மத குருவரை நிர்வாகம் பதவி விலக கோரியுள்ளது.
தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
கடந்த ஞாயிறு அன்று Champeaux பகுதி தேவாலயத்தில் வைத்து 2 வயது சிறுவன் ஒருவனுக்கு 89 வயதான பாதிரியார் Jacques Lacroix பெயரீட்டு விழா நடத்தினார்.
அப்போது குறித்த சிறுவன் சத்தமிட்டு அழுதுள்ளான். இதனையடுத்து பாதிரியார் Jacques Lacroix அவனை அமைதிப்படுத்த பல முறை முயன்றுள்ளார்.
ஆனால் பாதிரியாரின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. ஆனாலும் சிறுவன் அழுகுரலை நிறுத்தவில்லை.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பாதிரியார் Jacques Lacroix பொளேரென சிறுவனின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இது அந்த சிறுவனின் பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மட்டுமின்றி பெரும் விவாதத்திற்கும் இந்த சம்பவம் வித்திட்டது.
இந்த நிலையில் பேசிய பாதிரியார், தாம் வேண்டும் என்றே சிறுவனை தாக்கவில்லை, அழுகையை நிறுத்த என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியாமல் போனது என தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி சிறுவனின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கோருவதாகவும், இனிமேல் தாம் பாதிரியார் பணியை தொடர விரும்பவில்லை எனவும், அதுவே தனது கடைசி பெயரீட்டு விழாவாக இருக்கட்டும் எனவும் அவர் வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.