மூழ்கிபோன தமிழர்களின் வரலாறு! புதைந்துபோன மனிதன் பிறந்த முதல் இடம்

மூழ்கிப் போன எம் தமிழரின் வரலாற்று உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .தமிழர் வரலாற்றை கொஞ்சம் பின்சென்று அதாவது இருபது ஆயிரம் வருடங்களுக்கு முன் சென்று கடலில் மூழ்கிய ஓர் தனி உலகிற்கு சென்று பார்க்கலாம்.

குமரிக்கண்டத்தில் தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்,இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம்தமிழ் பிறந்தது.

இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம்இது தான் “நாவலன்தீவு” என்று அழைக்கப்பட்ட”குமரிக்கண்டம்.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாகஇயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்”குமரிக்கண்டம்”.

 

ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள்இருந்துள்ளது .

பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது .குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது .தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.

உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள்முந்தையது தான். நக்கீரர்”இறையனார் அகப்பொருள்”என்ற நூலில் மூன்று தமிழ்ச்சங்கங்கள் 9990 வருடங்கள்

தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென் மதுரையில்” கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,”பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்”ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .

இதில்அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்”கபாடபுரம்”நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன்”அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்”ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .

இதில்”தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம்தமிழ்ச் சங்கம் இன்றைய”மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் “அகநானூறு, புறநானூறு,நாலடியார்,திருக்குறள்”ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்தியஅரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம்

எப்போதே புதைந்து போனதை இப்போது தோண்டி எடுத்தால் மட்டும் போதாது அது நாளைய வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும் இல்லாவிடின் அதனால் எந்த வித பெருமையும் இல்லை தேவையும் இல்லை.

இப்படி வரலாறு அழிந்ததற்கு காரணம் ஆவணங்கள் முறையாக பாதுகாக்கப்படாமையே, உதாரணமாக இப்போது யாழ் நூலகங்கள் எரிக்கப்பட்டமைக்கு மன்னிப்பு கோருவதால் எதுவுமே மாறாது.

இனிமேல் நாம் 2000வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடஉலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம்.தனக்கே உரிய சிறப்பினால் உலகுக்கே எச்சரிக்கை விடுத்தான் அன்றைய வீரத் தமிழன் அவன் சேர்த்து வைத்த பெருமையை இப்போது நாம் காத்துக் கொண்டு வருகின்றோமா என்பது கேள்விக் குறிதான்.