ரமழான் பண்டிகைப்பரிசே ஞானசார தேரரின் கைது: காவியின் மீது கை வைத்ததற்கான விளைவை அரசாங்கம் விரைவில் அனுபவிக்க நேரிடும்; பொதுபலசேனா எச்சரிக்கை!!

ஞான­சார தேரரின் கைது பொது­பல சேனா அமைப்­பினை மேலும் பல­மான சக்­தி­யாக மாற்­றி­யுள்­ளது. ஒரு சிறிய அமைப்­பாக செயற்­ பட்ட நாம் இனிமேல் மிகப்­பெ­ரிய அமைப்­பாக மாற்றம் பெறு­வதை எவ­ராலும் தடுக்க முடி­யாது. பெளத்த காவியின் மீது கைவைத்­ததன் விளைவை அர­சாங்கம் அனு­ப­விக்க நேரும் என்று அந்த அமைப்­பினர் எச்­ச­ரித்­துள்­ளனர்.

ரமழான் பண்­டி­கைக்­காக முஸ்­லிம்­க­ளுக்கு கொடுத்த பரிசே ஞான­சார தேரரின் கைதா கும் எனவும் அவ்­வ­மைப்­பினர் சுட்­டிக்­காட் டினர். பொது­பல சேனா அமைப்பின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று இடம்­பெற்ற நிலையில் அவ்­வ­மைப்­பினர் இக் கருத்­துக்­களை முன்­வைத்­தனர்.

இது குறித்து பொது­பல சேனா அமைப்பின் தேசிய அமைப்­பாளர் விதா­னந்­த­னிய நந்த தேரர் கூறு­கையில்,

ரமழான்…
நாட்டின் அமை­திக்­கா­கவும் மக்­களின் உரி­மைக்­கா­கவும் குரல் எழுப்­பிய எமது அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

அவ­ரது கைதின் பின்­ன­ணியில் பொய்­யான கார­ணி­களை ஊட­கங்கள் பரப்பி வரு­கின்­றன. இன்று முஸ்லிம் மக்­களின் ரமழான் பண்­டிகை நாளாகும்.

அவர்­க­ளுக்கு எமது மனப்­பூர்­வ­மான வாழ்த்­துக்­களை தெரி­விக்­கின்றோம். அதேபோல் அவர்­க­ளுக்கு அர­சாங்கம் நல்­ல­தொரு பரி­சையும் கொடுத்துள்ளது.

நாட்டில் ஊழல், கொள்ளை, கொலை என்ற பாரிய தவ­று­களை செய்த பல அர­சி­யல்­வா­திகள் இன்றும் சுதந்­த­ர­மாக நட­மாடி வருகின்றனர்.

இன­வா­தத்தை பரப்பும், இன­வா­தத்தை போசிக்கும், பல குற்­றங்­களை செய்யும், காடு­களை அழிக்கும், சட்­ட­வி­ரோத குடி­யேற்­றங்­களை முன்­னெ­டுக்கும் நபர்­க­ளுக்கு எதி­ராக அர­சாங்­கமோ, நீதி மன்­றமோ எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்­த­தாக தெரி­ய­வில்லை. அதேபோல் மத்­திய வங்கி விவகாரத்தில்  மிகப்­பெ­ரிய ஊழலை செய்த நபர்­களை கைது செய்­த­தா­கவோ அல்­லது அதற்­கான முயற்­சி­களை எடுத்­த­தா­கவோ எமக்கு தெரியவில்லை.

ஆனால் அவற்றை எல்லாம் விட்­டு­விட்டு ஒரு சாதா­ரண சம்­ப­வத்தை கருத்தில் கொண்டு இன்று ஞான­சார தேரர் கைது­செய்­யப்­பட்­டுள்ளார். குற்­ற­வியல் குற்­றத்தின் கீழான எந்த குற்­றங்­க­ளையும் அவர் செய்­ய­வில்லை எனக் குறிப்­பிட்டார்.

இங்கு மாகல்­கந்தே சுத்­தத தேரர் கருத்து கூறு­கையில்,

ஞான­சார தேரர் ஒரு சிங்கம் போன்­றவர். அவர் சிறையில் அரைக்­கால்­சட்டை அணி­வதை பற்றி ஒரு­போதும் கவ­லைப்­பட்­ட­தில்லை. அவ­ருக்கு ஒருபோதும் சிறை அச்சம் இருந்­த­தில்லை.

இந்த அர­சாங்கம் நாட்டின் பெளத்த காவி­களின் மீது கை வைத்­து­விட்­டது. இதற்­கான பலனை அர­சாங்கம் அனு­ப­விக்கும். இன்னும் சிறிது காலத்தில் தேர்தல் வரப்­போ­கின்­றது. அதில் எமது பதி­லடி என்ன என்­பதை பிர­தமர் ரணிலும், ஜனா­தி­பதி மைத்­தி­ரியும் அனு­ப­விப்­பார்கள்.

இன்று புலம்­பெயர் அமைப்­பு­களின் தேவைக்கு அமைய பெளத்த பிக்­கு­களை சிறைப்­பி­டிக்கும் கொள்கை உரு­வா­கி­யுள்­ளது. இந்த நாட்டின் பெளத்த சிங்கள சக்­திகள் உள்­ளன.

இந்த சக்­திகள் இன்றும் அமை­தி­காக உள்­ளன. ஆனால் என்றும் அமை­தி­யாக இருக்­கப்­போ­வ­தில்லை. ஞான­சார தேருக்கு பல்­வேறு தரப்­பிலும் உயிர் அச்­சு­றுத்தல் உள்­ளது, சிறை­யிலும் அவரின் உயி­ருக்கு அச்­சு­றுத்தல் உள்­ளது. ஆகவே சிறையில் அவ­ருக்கு ஏதும் ஆகி­வி­டுமோ என்ற அச்சம் எமக்கு உள்­ளது. அவரை பாது­காக்க வேண்டும்.

இன்று ஞான­சார தேருக்கு நேர்ந்த கதி நாளை இன்­னொரு தேர­ருக்கும் நடக்கும். ஞான­சார தேரர் மீது எடுத்த சட்ட நட­வ­டிக்­கையை ஏன் அர்­ஜுன மகேந்தரன் விட­யத்தில் நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யா­துள்­ளது.

இந்த நாட்டில் பெளத்த பிக்­குகள் மீது மட்டும் ஏன் கை வைக்­கின்­றீர்கள். மைத்­தி­ரி-­ரணில் ஆகிய இரு­வரும் தைரியம் இல்­லாத தலை­மைகள். கள்­வர்­களை, குற்­ற­வா­ளி­களை தண்­டிக்க தைரியம் இல்­லாது சிங்­கள கொள்­கையின் மீது கை வைத்­து­விட்­டனர்.

ஞான­சாரர் என்ற நபரை பார்க்க வேண்டாம். அவ­ரது கொள்­கையை பாருங்கள். அவர் என்ன கூறு­கின்றார் என்­பதை பாருங்கள்.

அது நாட்டில் எவ்­வாறு தாக்கம் செலுத்­து­கின்­றது என்­பதை பார்க்க வேண்டும். அந்த கொள்கை பல­மான கொள்­கை­யாகும். இது நாட்டின் ஒற்­று­மைக்­கான கொள்­கை­யாகும் . சிங்­கள பௌத்­தத்தை பாது­காக்கும் கொள்­கை­யாகும்.

இந்த நாட்டில் இரா­ணு­வத்­தினர் தண்­டிக்­கப்­ப­டு­கின்­றனர். அவர்­களின் சலு­கைகள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இதற்கு எதி­ராக ஞான­சார தேரர் குரல் கொடுத்தார்.

நாட்டு மக்­களின் பாது­காப்­புக்­காக குரல் கொடுத்­த­வ­ரது வாயை மூடி­வி­டீர்கள். இது இப்­ப­டியே முடிந்­து­விடப் போவ­தில்லை. அடுத்த கட்ட போராட்டம் தொடரும். சகல பெளத்த அமைப்­பு­க­ளையும் இணைத்து போராட்­டத்தை முன்­னெ­டுப்போம்.

ஒரு அமைப்­பாக இருந்த நாம் இனிமேல் பெளத்த அமைப்­பு­களை இணைத்த பாரிய கூட்­டணி அமைப்­பாக மாற்றம் பெறுவோம்.

அதன் மூல­மாக எமது அடுத்­த­கட்ட வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்போம். அதனை எவ­ராலும் தடுக்க முடி­யாது. ரமழான் பண்­டிக்­கையில் முஸ்லிம்­க­ளுக்கு அர­சாங்கம் கொடுத்த பரிசே இந்த கைதாகும். எமக்கு இந்த சந்­தேகம் எழுந்­துள்­ளது.

இத்­தனை கால­மாக அமைத்தி காத்த அர­சாங்கம் இப்­போது முஸ்லிம் மக்­க­ளுக்­காக இந்த கைதை செய்­துள்­ளது. அதேபோல் அடுத்த தேர்­தலில் முஸ்லிம் வாக்­கு­களை தக்­க­வைக்­கவும் முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­யா­கவும் இது அமைந்­துள்­ளது.

மிகவும் மோச­மான வகையில் இந்த சம்­ப­வங்கள் அமைந்­துள்­ளன. இந்த நாட்டில் என்ன இடம்­பெ­று­கின்­றது என்­பது எமக்குத் தெரி­ய­வில்லை. நாட்டில் ஏன் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­று­கின்­றன என்­பது குறித்து எமக்கு தெரி­ய­வில்லை.

அர­சாங்கம் தமக்கு எதி­ரான சக்­தி­களை அச்­சு­றுத்தும் ஒரு நட­வ­டிக்­கை­யா­கவே இதனை கையாண்­டுள்­ளது. இது நாட்டில் உள்ள சகல பிக்­கு­க­ளுக்கும் ஒரு மரண அடி­யாகும் எனக் குறிப்­பிட்டார்.

டிலந்த விதா­னகே

பொது­பல சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே கூறு­கையில்,

எம்மை மேலும் பலப்­ப­டுத்­தவே இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. சமூ­கத்தின் பிழைகள் எமது கண்­க­ளுக்கு தென்­படும் போது நாம் செயற்­ப­ட­வேண்­டிய தேவை உள்­ளது. அதையே ஞான­சார தேரர் செய்­துள்ளார்.

இன்று நீதி­மன்றம் தீர்­மானம் ஒன்றை வழங்­கி­யுள்­ளது. விரும்­பியோ விரும்­பா­மலோ அந்த சட்­டத்தை மதிக்க வேண்­டிய தேவை உள்­ளது. நாம் விமர்­சிக்­கவும் விரும்­ப­வில்லை.

எனினும் இந்த சட்ட நகர்­வு­களில் எமக்கு சந்­தேகம் எழு­கின்­றது. சாதா­ரண ஒரு குற்­றத்­திற்­காக இவ்­வ­ளவு பெரிய தண்­டனை எவ்­வாறு வழங்­கப்­பட்­டது. இதில் சந்­தேகம் உள்­ளது.

இதற்கு முன்னர் தேரர் மத மாற்­றத்­திற்கு எதி­ரான பல­மான போராட்டம் ஒன்றை முன்­னெ­டுத்தார், பிரி­வி­னை­வாத கொள்­கைக்கு எதி­ராக போரா­டி­யவர். இவற்றை ஏற்­று­கொள்­ளாத ஒரு அர­சாங்கம் இன்று ஆட்­சிக்கு வந்­துள்­ளது.

அதனால் தான் எம்மை சிறையில் அடைப்­ப­தாக ஆரம்­பத்தில் இருந்தே கூறி வந்­தனர். இப்­போது இடம்­பெறும் அனைத்து சம்­ப­வங்­களும் சர்­வ­தேச அழுத்­தத்தின் கார­ணத்­தி­னா­லேயே நடை­பெ­று­கின்­றது.

சர்­வ­தேசம் எம்மை தண்­டிக்க வேண்டும் என்ற அழுத்­த­மான கோரிக்­கையை முன்­வைத்­துள்­ளது. அதுவே இன்று இடம்­பெற்று வரு­கின்­றது. இது­வரை நாம் முன்­னெ­டுத்த வேலைத்­திட்­டங்­களை இதற்கும் அப்பால் கொண்டு சென்று பாரிய அமைப்பாக நாம் ஒன்றினைவோம் என்ற வாக்குறுதியை கொடுப்போம்.

ஞானசார தேரர் விடுதலையாக வேண்டும். அதற்கான போராட்டம் ஆரம்பிக்கும். அரசாங்கம் நேரடியாக பிக்குகளுக்கு விடுத்துள்ள அச்சுறுத்தலே இதுவாகும்.

ஞானசார தேரரை விடுவிக்க ஜனாதிபதியை சந்திக்கவோ அவர்களிடம் மன்னிப்பு கேட்கவோ தயாராக இல்லை. எம்மீது தவறு இல்லாத நிலையில் நாம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த சம்பவம் திட்டமிட்ட சதியாகும்.

அது எமக்கு நன்றாக தெரிகின்றது. ஏனைய அரசியல்வாதிகளிடம் வளையும் சட்டம் ஞானசார தேரர் விடத்தில் நேரடியாக செயற்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.