தென்னிலங்கையில் ஏற்பட்ட பேராபத்து! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்! அதிர்ச்சி காணொளி

இலங்கையில் ஏற்படும் வாகன விபத்துகளால் நாளாந்தம் உயிரிழப்புகள் ஏற்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளால் அதிக விபத்துகள் ஏற்படுவதுடன், மோட்டார் சைக்களின் சாரதிகள் அதிகளவில் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தென்னிலங்கையில் ஏற்பட்ட விபத்தில் பெண்ணொருவர் தெய்வாதீனமாக தப்பிய காணொளியை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இருசக்கர வாகத்தில் செல்லும் பெண்ணொருவர் அருகில் உள்ள கால்வாயில் வீழ்ந்துள்ளார். எனினும் அங்கிருந்தவர்கள் உடனடியாக செயற்பட்டமையால் அவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

வாகனங்களை செலுத்துவோர் மிகவும் அவதானமாக செல்ல வேண்டும் எனவும், போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறும் மக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.