வடக்கு முதலமைச்சர் தலைமையில் புதியகட்சி??

புதிய கட்சி அமைப்பதா இல்லையா என்பது குறித்து வெளிப்படுத்த மூன்றுவார கால அவகாசம் தருமாறு வடக்கு  மாகாணசபை முதலமைச்சர் தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்களிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் மக்கள் பேரவையின்  கூட்டம்  26-05-2018 அன்று  சனிக்கிழமை யாழ்பாணத்தில் நடைபெற்றது. சுமார் இரண்டு மணிநேரத்துக்கு மேலாக நடைபெற்ற சந்திப்பில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டு ஆராயப்பட்டன.

இந்நிலையில் மாகாணசபை தேர்தல் குறித்து பேச்சு எழுந்தது. இதன்போது தோ்தலில் களமிறங்க புதிய கட்சி அமைக்கப்படுமா இல்லையா என்பது குறித்து வெளிப்படுத்த வேண்டுமென முதலமைச்சரிடம் பேரவை உறுப்பினர்கள் பலரும் கோரினர்.

இந்நிலையிலேயே புதிய கட்சி அமைப்பதா இல்லையா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறேன்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார், ஈ.பி. ஆா். எல்.எவ்.வின் சுரேஷ் பிரேமச்சத்திரன் மற்றும் புளொட்டின் சித்தர்த்தனுடன் பேசு்சு நடத்தியுள்ளேன்.

இதுதொடர்பில் ஆராயவேண்டியுள்ளது.

இதற்கு 2முதல் 3வாரம் தேவையாகவுள்ளது. இதன் பின் புதிய கட்சி அமைப்பதா இல்லையா என தெரிவிப்பதாக பேரவை கூட்டத்தில் பங்குபற்றிய தரப்பினர் தகவல் தெரிவித்தனர்