ரணில் – மைத்திரியால் ஏமாற்றப் பட்ட கூட்டமைப்பு! அடுத்து என்ன?

மன்­னார் மாவட்­டத்­துக்­குப் பெரும்­பான்மை இனத்­த­வ­ரையே மீண்­டும் மாவட்­டச் செய­ல­ராக நிய­மிக்க உள்­நாட்டு அலு­வல்­கள் அமைச்சு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

அதற்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கடும் கண்­ட­னத்­தைத் தெரி­வித்­துள்­ளது.

வடக்கு மாகா­ணத்­தின் 5 மாவட்­டங்­க­ளுக்­கும் தமி­ழர்­களை மாவட்­டச் செய­லர்­க­ளாக நிய­மிக்­கத் தலைமை அமைச்­சர் கொள்­கை­ய­ள­வில் இணக்­கம் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்த நிலை­யி­லும் அதனை மீறி பெரும்­பான்மை இனத்­தைச் சேர்ந்த ஒரு­வரே மன்­னார் மாவட்­டத்­தின் மாவட்­டச் செய­ல­ரா­கத் தற்­போது சிபார்சு செய்­யப்­பட்­டுள்­ளார்.

இது­த­விர, முல்­லைத்­தீவு மாவட்­ட­ செய­லர் திரு­மதி. ரூப­வதி கேதீஸ்­வ­ரன் கிளி­நொச்சி மாவட்­டச் செய­ல­ரா­வும், கிளி­நொச்சி மாவட்­டச் செய­லர் சுந்­த­ரம் அரு­மை­நா­ய­கம் அமைச்சு ஒன்­றின் செய­லா­ள­ரா­க­வும் நிய­மிக்­கப்­பட பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

மன்­னார் மாவட்­டச் செய­ல­ராக பெரும்­பான்­மை­யின அதி­காரி நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்­புக் கிளம்­பி­யுள்­ள­தால் அது இழு­ப­றி­யில் உள்­ள­தாக மேலும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்த விடயத்திலும் இனக்க அரசியல் என்று கூறி சிங்கள அரச அதிபரை கூட்டமைப்பு நியமிக்க வாய்ப்பு உள்ளதாக கூறும் அவதானிகள் வரலாற்றில் என்றுமில்லாத அளவில் கூட்டமைப்பின் இனக்க அரசியல் காலத்தில் அதிகளவான சிங்கள மயமாதல் நடை பெறுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.