தமிழ் யுவதியிடம் சேட்டையிட்ட முஸ்லிம் இளைஞனுக்கு நையப்புடைப்பு..

அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பிரதேசத்தில் தமிழ் யுவதி ஒருவரிடம் சேட்டையிட முற்பட்ட முஸ்லிம் இளைஞன் ஒருவர் அங்கு நின்ற இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞன் இயக்கி வந்த உந்துருளியொன்றும் அங்கு நின்றவர்களால் எரியூட்டப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறுகின்றார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், நையப்புடைக்கப்பட்ட இளைஞனை விடுவித்ததுடன் அவனிடம் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை குறித்த இளைஞன் இதுபோன்று பல பெண் பிள்ளைகளிடம் இவ்வாறான சேட்டைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இன்றைய தினமே வசமாக மாட்டுப்பட்டார் என்றும் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்டனர்.