பசுவதைக்கு எதிராக தென்மராட்சியில் ஆர்ப்பாட்டம்!

பசுவதையை ஒழிப்போம் பசுவை காப்போம் என்ற தொனிப்பொருளில் சாவகச்சேரி மருத்துவமனை முன்பாக தற்போது ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது .
சிவசேனை அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது .
ஆர்ப்பாட்டத்தில் இந்து மத பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர் .
ஆர்ப்பாட்டத்தில் வேண்டாம் வேண்டாம் பசுவதை வேண்டாம்,சைவர்களும் பெளத்தர்களும் வாழும் நாட்டில் மாட்டு இறைச்சி கடை ஏன் உள்ளிட்ட பதாகைகளை தாங்கி இருந்தனர்